உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு -04.06.2025

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலணை பிதேச சபையும் பிரதேச செயலகமூம் புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவோியர் சனசமூக நிலையமும் இணைந்து கடந்த 04.06.2025 அன்று நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பிரதேச சபை ஊழியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊர் மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

உலக சுற்றாடல் தின நிகழ்வு -05.06.2025

வேலணை பிரதேச சபையும் அம்பிகைநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தப்பட்ட உலக சுற்றாடல் தின நிகழ்வானது 05.06.2025 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உள்ளுராடசி உதவியாளர் திருமதி சி.மோி மெக்டலின், சனசமுக உத்தியோகத்தர் திருமதி  ரா.சயுந்தினி அவர்கள் உலக சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தூய்மைப்படுத்தல் நிகழ்வு நடைபெற்றது.

குறித்த செயற்பாட்டிற்கு வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சனசமூக நிலைய நிர்வாக அங்கத்தவர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள், மாணவிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

 

உலக சுற்றடல் தின நிகழ்வு – 04.06.2025

ஜீன் 05 உலக சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டத்தின் Ending Plastic Pullution எனும் உலகலாவிய தொனிப்பொருளின் கீழ் அராலி சந்தி தொடக்கம் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் எல்லைவரை நடைபெற்ற தூய்மைப்படுத்தல் நிகழ்வு, கடந்த 04.06.2025 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 08.30 மணிக்கு வேலணை பிரதேச சபையினால் நடாத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளின் அரச திணைக்களங்கள், சனசமூக நிலைய நிர்வாக அங்கத்தவர்கள், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்ததோடு குறித்த நிகழ்விற்கு Save a Life அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

செயலாளாின் பிாிவுபசார நிகழ்வு -30.05.2025

எமது பிரதேச சபையில் கடந்த 3 வருடங்களாக சபையின் செயலாளராக நேர்மையுடனும் திறமையுடனும் கடமையாற்றி 30.05.2025 அன்று ஓய்வு பெற்றுச் செல்லும் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களை பாராட்டுவதுடன் அவரது ஓய்வுக்காலம் சிறப்புற வாழ்த்துகின்றோம். மற்றும் அவர்களின் பணி நிறைவு நிகழ்வு 30.05.2025 அன்று தலைமை அலுவலகத்தில் சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களினால் நடாத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மண்டைதீவு நூலக புனரமைப்பு திறப்பு விழாவும் புத்தக கண்காட்சியும் -30.05.2025

வேலணை பிரதேச சபையின் கீழுள்ள மண்டைதீவு உப அலுவலகத்தில் நூலக திறப்புவிழாவும் புத்தக கண்காட்சியுமான நிகழ்வானது மண்டைதீவு பொறுப்பதிகாாி திருமதி ஜ.சிந்துஜா தலைமையில் 30.05.2025 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச சபையின் செயலாளர் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மண்டைதீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.சி.இளங்கோ அவர்கள் மற்றும் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் அதிபர் திரு.சே.சுவைனஸ்அவர்களும்  மாணவர்கள், மாணவிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

2024 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி விழா நிகழ்வு -28.05.2025

வேலணை பிரதேச சபையின் 2024ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி விழா நிகழ்வானது வேலணை பிரதேச சபையின் செயலாளர் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களின் தலைமையில் 28.05.2025 அன்று யா/வேலணை மத்திய கல்லூரி சேர்.வை.துரைசாமி ஞாபகார்த்த பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் சிரேஷ;ட உதவிச் செயலாளர் இ.குருபரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், கரவெட்டி பிரதேசசபையின் செயலாளர் க.கம்சநாதன் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டிருந்தனர்.

விருந்தினர்கள் பாண்ட் அணிவகுப்பு மரியாதையுடன் மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர். நிகழ்வில் நடனப் போட்டிகள் நடைபெற்றதுடன், பிரதேச சபை பணியாளர்களுக்கான மெச்சுரை சான்றிதழ்களையும் ஆளுநர் வழங்கி வைத்தார். அத்துடன் பிரதேச சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரன் நாளை வெள்ளிக்கிழமையுடன் அரச சேவையிலிருந்து ஓய்வுபெறும் நிலையில் அவருக்கான கௌரவிப்பையும் ஆளுநர் வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், சபையின் செயலாளர் தனது உரையில் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் மக்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் உள்ளூராட்சி விழாவை ஒழுங்கு செய்ததாகக் குறிப்பிட்டார். மக்களுடன் உள்ளூராட்சி மன்றங்கள் மிக நெருக்கமாகப் பணியாற்றத்தான் வேண்டும். ஏனெனில் உள்ளூராட்சி மன்றங்களால் மக்களுக்கு பல சேவைகள் கிடைக்கப்பெறுகின்றன. அவை வினைத்திறனாக மக்களுக்கு கிடைக்கவேண்டுமென்றால் சிறந்த தலைமைத்துவம் இருக்கவேண்டும்.
சில இடங்களில் தீராத பிரச்சினைகள் கூட சிறப்பான தலைமைத்துவம் கிடைக்கப்பெற்ற பின்னர் தீர்ந்துவிடும். ஆனால் சில இடங்களில் தீர்க்கக் கூடிய பிரச்சினைகள் கூட தலைமைத்துவம் ஒழுங்காக அமையாவிட்டால் இழுபடும்.
முதலீட்டாளர்கள் எங்கள் மாகாணத்துக்குத் தேவை. ஆனால் சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் அவர்களை அலைக்கழிக்கின்றனர். ஒரே தடவையில் தேவையான ஆவணங்களைக் கொண்டுவரச் சொல்வதில்லை. இப்போதுகூட ஒரு சபையின் செயலாளர் இவ்வாறு முதலீட்டாளர் ஒருவரை அலையவிட்டிருக்கின்றார்.
ஆளுநர் உரையாற்றுகையில், மக்களுக்கு சேவை செய்வதற்கு உருவாக்கப்பட்ட மன்றங்கள் மக்களின் தேவைகளை அறிந்து தேடிச்சென்று சேவை செய்யவேண்டும். அந்த மன்றங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுக்கொண்டால், மக்கள் பங்களிப்புடன் பல்வேறு விடயங்களை அவர்களால் வெற்றிகரமாகச் செயற்படுத்த முடியும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
நாளை ஓய்வுபெறும் சபையின் செயலாளர் தி.தியாகச்சந்திரனை 1993ஆம் ஆண்டிலிருந்து தெரியும். நான் தெல்லிப்பழை உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் உதவி அரசாங்க அதிபராக இருந்தபோது அவர் பிரதேச சபையின் மல்லாகம் உப அலுவலகத்தில் பணியாற்றியவர். மற்றவர்களை மதிக்கின்ற சிறந்த பண்பாளன். இந்தப் பிரதேசத்துக்கு அவர் சிறப்பான பணியாற்றியுள்ளார். அவரது ஓய்வுகாலம் சிறக்கவேண்டுகின்றேன் என்பதுடன் எதிர்காலத்தில் இந்தச் சபைக்கும் அவர் தனது ஆலோசனை வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றேன்.
உள்ளூராட்சி மன்றங்களின் வருமானங்களை எதிர்காலத்தில் அதிகரிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் தங்களின் வருமானத்தில் 20 சதவீதம் வரையில் தமது சபையின் ஊழியர்களின் சம்பளத்துக்காக செலவு செய்யவேண்டியுள்ளன. எஞ்சிய நிதியிலேயே அபிவிருத்தி வேலைகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டியதாகவுள்ளது.
வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இருந்தாலும் எங்களின் சில செயலாளர்களின் வேலைகளையும் நான் பார்க்கவேண்டியிருக்கின்றது. சில செயலாளர்கள் மக்களைச் சந்திப்பதேயில்லை. தங்களைச் சந்திப்பவர்களுடன் எரிந்து விழுகின்றார்கள். இதனால் மக்கள் அவர்க ளைச் சந்திப்பதைவிட என்னைச் சந்திக்கலாம் என்று வருகின்றனர். மக்களுக்காகத்தான் பதவிகளில் இருக்கின்றோம் என்பதை அதிகாரிகள் பலர் மறந்துவிடுகின்றனர், என்றார் ஆளுநர்.
இதேவேளை, உள்ளூர் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியுடன் வேலணை வங்களாவடியில் நிர்மாணிக்கப்பட்ட கடைத் தொகுதியையும் ஆளுநர் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

எமது சபையுடன் “Drive Green” புகைப்பாிசோதனை நிலைய அலுவலர்கள் இணைந்து வெண்புரவி கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் சமூக பணி-05.03.2025

வேலணை பிரதேச சபையும் “Drive Green” புகைபாிசோதனை நிலைய அலுவலர்களும் இணைந்து அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை கருப்பொருளாகக் கொண்டு எமது சபைக்குட்பட்ட அல்லைப்பிட்டி வெண்புரவி கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் சமூக பணி 05.03.2025 அன்று நடைபெற்றது. 

2025 ஆம் ஆண்டுக்கான கேள்வி அறிவித்தல் – 07.11.2025

வேலணை பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட மீன் சந்தை, மரக்கறிச்சந்தைகள், இறைச்சிக்கடைகள், சிற்றூண்டிச்சாலைகள், கடைகள் வாகனத் தாிப்பிடங்களும் மலசலகூடமும் உள்ளடங்கலான சுற்றுலாமையம் (படகு சேவைகள் தவிர்த்து) என்பனவற்றை 01.01.2025 தொடக்கம் 31.12.2025 வரை குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்விகள் சபையால் கோரப்படுகின்றன.

 

பொது அறிவித்தல் -2025 ஆம் ஆண்டுக்கான பாதீடுக்கான முன்மொழிவு கோரல் -02.102024

எமது சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் வேலணை பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கோரப்படுகின்றது.

குறிப்பாக பெண்கள், இளையோர், விசேட தேவையுடையோர் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களிடமிருந்து முன்மொழிவுகள் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்வமுடையோர் எதிர்வரும் 14.10.2024 ஆம் திகதிக்கு முன்னர் பினவரும் வழிகளினூடாக எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தபால் முகவாி  செயலாளர், வேலணை பிரதேச சபை.

மின்னஞ்சல் : velanaips@gmail.com

தொலைபேசி இல :021 2210180 / 021 2211506

இணையத்தளம் :www.velanai.ps.gov.lk

தி.தியாகச்சந்திரன்,

செயலாளர்,

வேலணை பிரதேச சபை

2024 ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புங்குடுதீவு பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி -04.09.2024

2024 ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  வேலணை பிரதேச சபையின் அல்லைப்பிட்டி பொது நூலகத்தினால் 04.09.2024 அன்று புங்குடுதீவு உப அலுவலக நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அத்தோடு முன்பள்ளி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வர்ணம் தீட்டல், விநோத உடைப்போட்டி மற்றும் கற்பனை கதை கூறல் போன்ற போட்டிகளும் நடைபெற்றது.

இப்போட்டிகளுக்கு வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலக உத்தியோகத்தர்கள் நடுவர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புங்குடுதீவு உப அலுவலக  பொறுப்பதிகாாி, முன்பள்ளி ஆசிரியர்கள்,நூலகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விருப்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.