எமது சபையுடன் “Drive Green” புகைப்பாிசோதனை நிலைய அலுவலர்கள் இணைந்து வெண்புரவி கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் சமூக பணி-05.03.2025

வேலணை பிரதேச சபையும் “Drive Green” புகைபாிசோதனை நிலைய அலுவலர்களும் இணைந்து அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை கருப்பொருளாகக் கொண்டு எமது சபைக்குட்பட்ட அல்லைப்பிட்டி வெண்புரவி கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் சமூக பணி 05.03.2025 அன்று நடைபெற்றது. 

2025 ஆம் ஆண்டுக்கான கேள்வி அறிவித்தல் – 07.11.2025

வேலணை பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட மீன் சந்தை, மரக்கறிச்சந்தைகள், இறைச்சிக்கடைகள், சிற்றூண்டிச்சாலைகள், கடைகள் வாகனத் தாிப்பிடங்களும் மலசலகூடமும் உள்ளடங்கலான சுற்றுலாமையம் (படகு சேவைகள் தவிர்த்து) என்பனவற்றை 01.01.2025 தொடக்கம் 31.12.2025 வரை குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்விகள் சபையால் கோரப்படுகின்றன.

 

பொது அறிவித்தல் -2025 ஆம் ஆண்டுக்கான பாதீடுக்கான முன்மொழிவு கோரல் -02.102024

எமது சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் வேலணை பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கோரப்படுகின்றது.

குறிப்பாக பெண்கள், இளையோர், விசேட தேவையுடையோர் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களிடமிருந்து முன்மொழிவுகள் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்வமுடையோர் எதிர்வரும் 14.10.2024 ஆம் திகதிக்கு முன்னர் பினவரும் வழிகளினூடாக எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

தபால் முகவாி  செயலாளர், வேலணை பிரதேச சபை.

மின்னஞ்சல் : velanaips@gmail.com

தொலைபேசி இல :021 2210180 / 021 2211506

இணையத்தளம் :www.velanai.ps.gov.lk

தி.தியாகச்சந்திரன்,

செயலாளர்,

வேலணை பிரதேச சபை

2024 ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புங்குடுதீவு பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி -04.09.2024

2024 ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு  வேலணை பிரதேச சபையின் அல்லைப்பிட்டி பொது நூலகத்தினால் 04.09.2024 அன்று புங்குடுதீவு உப அலுவலக நூலகத்தில் புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. அத்தோடு முன்பள்ளி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட வர்ணம் தீட்டல், விநோத உடைப்போட்டி மற்றும் கற்பனை கதை கூறல் போன்ற போட்டிகளும் நடைபெற்றது.

இப்போட்டிகளுக்கு வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலக உத்தியோகத்தர்கள் நடுவர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் புங்குடுதீவு உப அலுவலக  பொறுப்பதிகாாி, முன்பள்ளி ஆசிரியர்கள்,நூலகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விருப்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

2024 ம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு அல்லைப்பிட்டி பொது நூலகத்தினால் நடாத்தப்பட்ட புத்தகக் கண்காட்சி -10.09.2024

2024 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வேலணை பிரதேச சபையின் உப அலுவலக அல்லைப்பிட்டி  பொது நூலகத்தினால் கடந்த 10.09.2024 அன்று அல்லைப்பிட்டி றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் மற்றும் அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்திலும் புத்தகக் கண்காட்சி நடைப்பெற்றது.

”உலகை வென்றவர்கள் வாசித்த மக்களே ” என்ற தொனிப்பொருளில் மாணவர்களுக்கு விழிப்புட்டும் வகையில் இக்கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் மாணவர்கள், ஆசிாியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சாவகச்சோி பிரதேச சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளுராட்சி மாத நிகழ்வில் வேலணை பிரதேச சபையும் பங்கேட்பு -13.08.2024

2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மாத நிகழ்வினை முன்னிட்டு 13.08.2024 அன்று சாவகச்சேரி பிரதேச சபையினால் நாவற்குழி நெய்தல் கடற்கரையில் ஆண், பெண் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தாழிழுவைப் போட்டி (கயிறிழுத்தல்) மற்றும் கிளித்தட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டிருந்ததுடன் நாவற்குழி உப அலுவலகத்தில் சதுரங்க போட்டிகளும் நடாத்தப்பட்டிருந்தன.
இவற்றில் வேலணை பிரதேச சபையானது சதுரங்க போட்டியில் முதலிடத்தையும் பெண்களுக்கான கிளித்தட்டு போட்டியில் முதலிடத்தையும் ஆண்களுக்கான கயிறிழுத்தல் போட்டியில் இரண்டாம் இடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.