
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலணை பிதேச சபையும் பிரதேச செயலகமூம் புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவோியர் சனசமூக நிலையமும் இணைந்து கடந்த 04.06.2025 அன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பிரதேச சபை ஊழியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊர் மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.



வேலணை பிரதேச சபையும் அம்பிகைநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தப்பட்ட உலக சுற்றாடல் தின நிகழ்வானது 05.06.2025 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உள்ளுராடசி உதவியாளர் திருமதி சி.மோி மெக்டலின், சனசமுக உத்தியோகத்தர் திருமதி ரா.சயுந்தினி அவர்கள் உலக சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தூய்மைப்படுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
குறித்த செயற்பாட்டிற்கு வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சனசமூக நிலைய நிர்வாக அங்கத்தவர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள், மாணவிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.





வேலணை பிரதேச சபையின் கீழுள்ள மண்டைதீவு உப அலுவலகத்தில் நூலக திறப்புவிழாவும் புத்தக கண்காட்சியுமான நிகழ்வானது மண்டைதீவு பொறுப்பதிகாாி திருமதி ஜ.சிந்துஜா தலைமையில் 30.05.2025 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச சபையின் செயலாளர் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மண்டைதீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.சி.இளங்கோ அவர்கள் மற்றும் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் அதிபர் திரு.சே.சுவைனஸ்அவர்களும் மாணவர்கள், மாணவிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.





வேலணை பிரதேச சபையும் “Drive Green” புகைபாிசோதனை நிலைய அலுவலர்களும் இணைந்து அரசாங்கத்தின் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை கருப்பொருளாகக் கொண்டு எமது சபைக்குட்பட்ட அல்லைப்பிட்டி வெண்புரவி கடற்கரையோரங்களை தூய்மைப்படுத்தும் சமூக பணி 05.03.2025 அன்று நடைபெற்றது.



வேலணை பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட மீன் சந்தை, மரக்கறிச்சந்தைகள், இறைச்சிக்கடைகள், சிற்றூண்டிச்சாலைகள், கடைகள் வாகனத் தாிப்பிடங்களும் மலசலகூடமும் உள்ளடங்கலான சுற்றுலாமையம் (படகு சேவைகள் தவிர்த்து) என்பனவற்றை 01.01.2025 தொடக்கம் 31.12.2025 வரை குத்தகைக்கு வழங்குவதற்கான கேள்விகள் சபையால் கோரப்படுகின்றன.




எமது சபையின் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் வேலணை பிரதேச பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கோரப்படுகின்றது.
குறிப்பாக பெண்கள், இளையோர், விசேட தேவையுடையோர் மற்றும் பாதிக்கப்பட்ட குழுக்களிடமிருந்து முன்மொழிவுகள் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆர்வமுடையோர் எதிர்வரும் 14.10.2024 ஆம் திகதிக்கு முன்னர் பினவரும் வழிகளினூடாக எமக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
தபால் முகவாி செயலாளர், வேலணை பிரதேச சபை.
மின்னஞ்சல் : velanaips@gmail.com
தொலைபேசி இல :021 2210180 / 021 2211506
இணையத்தளம் :www.velanai.ps.gov.lk
தி.தியாகச்சந்திரன்,
செயலாளர்,
வேலணை பிரதேச சபை
