
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வேலணை பிதேச சபையும் பிரதேச செயலகமூம் புங்குடுதீவு புனித பிரான்சிஸ் சவோியர் சனசமூக நிலையமும் இணைந்து கடந்த 04.06.2025 அன்று நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் சனசமூக நிலைய அங்கத்தவர்கள், பிரதேச சபை ஊழியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊர் மக்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.



வேலணை பிரதேச சபையும் அம்பிகைநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தப்பட்ட உலக சுற்றாடல் தின நிகழ்வானது 05.06.2025 அன்று பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் உள்ளுராடசி உதவியாளர் திருமதி சி.மோி மெக்டலின், சனசமுக உத்தியோகத்தர் திருமதி ரா.சயுந்தினி அவர்கள் உலக சுற்றாடல் தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி தூய்மைப்படுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
குறித்த செயற்பாட்டிற்கு வேலணை பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சனசமூக நிலைய நிர்வாக அங்கத்தவர்கள், பொதுமக்கள், நலன்விரும்பிகள் மற்றும் மாணவர்கள், மாணவிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.





வேலணை பிரதேச சபையின் கீழுள்ள மண்டைதீவு உப அலுவலகத்தில் நூலக திறப்புவிழாவும் புத்தக கண்காட்சியுமான நிகழ்வானது மண்டைதீவு பொறுப்பதிகாாி திருமதி ஜ.சிந்துஜா தலைமையில் 30.05.2025 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச சபையின் செயலாளர் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மண்டைதீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.சி.இளங்கோ அவர்கள் மற்றும் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் அதிபர் திரு.சே.சுவைனஸ்அவர்களும் மாணவர்கள், மாணவிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.



