மண்டைதீவு நூலக புனரமைப்பு திறப்பு விழாவும் புத்தக கண்காட்சியும் -30.05.2025

வேலணை பிரதேச சபையின் கீழுள்ள மண்டைதீவு உப அலுவலகத்தில் நூலக திறப்புவிழாவும் புத்தக கண்காட்சியுமான நிகழ்வானது மண்டைதீவு பொறுப்பதிகாாி திருமதி ஜ.சிந்துஜா தலைமையில் 30.05.2025 அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வேலணை பிரதேச சபையின் செயலாளர் திரு.தி.தியாகச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மண்டைதீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு.சி.இளங்கோ அவர்கள் மற்றும் மண்டைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் அதிபர் திரு.சே.சுவைனஸ்அவர்களும்  மாணவர்கள், மாணவிகள் மற்றும் சமூக நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.