ஜீன் 05 உலக சுற்றாடல் தின நிகழ்ச்சித்திட்டத்தின் Ending Plastic Pullution எனும் உலகலாவிய தொனிப்பொருளின் கீழ் அராலி சந்தி தொடக்கம் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் எல்லைவரை நடைபெற்ற தூய்மைப்படுத்தல் நிகழ்வு, கடந்த 04.06.2025 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 08.30 மணிக்கு வேலணை பிரதேச சபையினால் நடாத்தப்பட்டது.
குறித்த நிகழ்வில் வேலணை பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளின் அரச திணைக்களங்கள், சனசமூக நிலைய நிர்வாக அங்கத்தவர்கள், மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்ததோடு குறித்த நிகழ்விற்கு Save a Life அனுசரனை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.