காணி உப பிரிப்பு மற்றும் ஒருங்கிணைப்புச் செய்யும் அபிவிருத்தி திட்டங்களை அனுமதித்தல்.

  • சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
1. சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்.

2. நடப்பாண்டு ஆதன வரி செலுத்திய பற்றுச் சீட்டின் பிரதி.

3. உபபிரிவிடுகை மேற்கொள்ளப்படவுள்ள காணிக்கான உரித்து ஆவணம் மூலப்பிரதியும் நிழற்பட பிரதியும் (காணி உறுதி, அனுமதி பத்திரம், போன்றன).

4. ஒரு மாத காலத்தினுள் காணி பதிவகத்திலிருந்து இறுதியாக மாற்றம் செய்யப்பட்ட உறுதிக்குரிய தோம்பும் உறுதியின் பிரதியும்.

5. உப பிரிவிடுகை மேற்கொள்ளப்படவுள்ள காணியின் நில அளவைப் படம்

6. பிரேரிக்கப்படவுள்ள துண்டாடப்படும் /பிரிவிடப்படும் காணி துண்டுகளினை காடட்டும் நில அளவைப்படம்.

7. ஏற்கனவே குறித்த காணி அல்லது காணியின் ஒரு பகுதி உப பிரிவிடல் அல்லது ஒருங்கிணைப்பு செய்யப்பட்டிருப்பின் உள்ளுராட்சி மன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரமும் அதன் பிரதியும். 8. ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தும் ஆவணத்தின் பிரதி.

9. குறித்த காணியன் உப பிரிவிடுகையினால் தற்போதுள்ள கட்டடம் ஒன்று. பிரிவடையும் சந்தர்ப்பத்தில் கட்டத்தின் அனுமதிக்கப்பட்ட வரைபடத்தின் பிரதி.

10. காணி அமைந்துள்ள இடத்திற்கு இலகுவில் பிரவேசிக்க கூடியதாக அமைந்த இட அமைவு வரைபடம்.

  • கால எல்லை 21 நாட்கள்
  • கட்டணம்
  1. விண்ணப்பப்பத்திர கட்டணம்; ரூ. 500.00
  2. கட்டணம்: காணியின் விஸ்தீரணத்தின் பிரகாரம் தீர்மானிக்கப்படும்.
  • பொறுப்பான உத்தியோகத்தர்கள்
  1. முன் அலுவலக உத்தியோகத்தர் ☎️021 221 0180
  2. தொழிநுட்ப உத்தியோகத்தர்; ☎️021 221 1506
  3. விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர் ☎️021 221 0180 ☎️021 221 1506