கட்டட படவரைஞர்கள் பதிவிற்கான கால நீடிப்பு -29.01.2025-14.02.2025

01.12.2024 ஆம் திகதி வலம்புாி பத்திாிகையில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தின் இலக்கம் 02 ஆம் பகுதிக்கு மேலதிகமானது,
2025 ஆம் ஆண்டு வேலணை பிரதேச சபையில் கட்டட அனுமதிக்கான கட்டட வரைபடங்களை வரைய விரும்பும் படவரைஞர்கள் மற்றும் பதிவுகளை புதுப்பிக்க விரும்புவோர் கீழ்வரும் விடயங்களை கருத்தில் கொண்டு உாிய ஆவணங்களுடன்  14.02.2025 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ள முடியும்.

  • வேலணை பிரதேச சபையின் கீழ் தகைமை பெற்று கட்டட படவரைஞராக இறுதி 02 வருடங்கள் தொடர்ச்சியாக செயற்படுபவர்கள் தமது பதிவினை புதுப்பிக்கமுடியும்.
  • அத்துடன் NVQ- Level 05 in Drafting Technology (building) கற்கைநெறியினை பயின்று வருபவர்களாகவும் இருத்தல் வேண்டும்.
  • புதிய பதிவுகளை மேற்கொள்ள விரும்புவோர் NVQ-Level 05 in Drafting Technology (building) கற்கைநெறியினை புர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
  • மேற்குறித்த பதிவுகள் 2025.01.29 – 14.02.2025 ஆம் திகதி மு.ப 9.00 – பி.ப 3.00 மணிவரையில் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

செயலாளர்,
வேலணை பிரதேச சபை.

புதுவருடத்தில் அரச சேவை சத்திய பிரமாணம் செய்தலும், கடமைகளை ஆரம்பித்தலும் 01.01.2025

இன்று 01.01.2025 காலை 8.30 மணிக்கு சபையின் முன்றலில் சகல அரச அலுவலர்களின் பங்குபற்றுதலோடு சத்தியபிரமாணம் நிகழ்வும், அதனை தொடர்ந்து சபையின் மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடலும் இடம்பெற்றது.

சபையின் செயலாளர் உரையாற்றுகையில், மலர்ந்துள்ள புதுவருடத்திலே அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு மக்களின் வாழ்க்கைதரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சகல செயற்பாடுகளையும் இலக்குகளையும் அடைவதற்கு எம்மை முழுமனதாக அர்ப்பணித்து அவற்றை திருப்திகரமாக நிறைவேற்றுவதற்காக எமது கடமைகளை குழுவாக செயற்பட்டு நிறைவேற்றுவோம். இலங்கையின் அபிவிருத்தி மற்றும் பொருளாதாரம் என்பனவற்றை மேலோங்கச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்.

அரசாங்கத்தின் புதிய எண்ணக்கருக்களான வறுமையை ஒழித்தல்,டிஐீட்டல் ஸ்ரீலங்கா,  கிளீன் ஸ்ரீலங்கா ஆகியவற்றை செயற்படுத்துவோம் அத்தோடு இப்புத்தாண்டு கடந்த வருடத்தை போல ஆரோக்கியமானதாகவும் பிரகாசமாகவும் அமையட்டும்.

 

    

நிதி கணக்கீட்டுக்கான இணக்கச் சான்றிதழ் -2023

The Association of Public Finance Accountants of Sri Lanka (APFASL) நிறுவனத்தினால் வருடாந்தம் சிறந்த ஆண்டு அறிக்கைகள் மற்றும் கணக்குகளுக்கென வழங்கப்பட்டு வருகின்ற விருது வழங்கல் விழாவில் மாகாண நிர்வாகத்திற்கான அமைச்சுக்கள்,திணைக்களங்கள் மற்றம் உள்ளூராட்சி மன்றங்களின் பிரிவின்கீழ் 2023 ஆம் ஆண்டு கணக்கறிக்களுக்கான போட்டியில் கலந்துகொண்டு எமது அலுவலகம் உரிய நியமங்களுக்கு அமைய கணக்கு அறிக்கைகளைத் தயாரிப்பதனை உறுதிப்படுத்தும் சான்றிதழைப் வேலணை பிரதேச சபை பெற்றுக்கொண்டது.
இன்று 2024.12.02ஆம் திகதி கொழும்பு BMICH இல் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் எமது சபையின் செயலாளர் திரு தி.தியாகச்சந்திரன் மற்றும்  நிதி உதவியாளர். திரு.ம.பிரசாந்தன் என்போர் கலந்து கொண்டு குறித்த சான்றிதழை பெற்றுக்கொண்டனர்.